Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் வெச்சதுதான் ரேட்டு; இஷ்டம்னா வாங்கு! – அமெரிக்காவில் அட்டகாசம் செய்த இந்தியர்!

Webdunia
ஞாயிறு, 10 மே 2020 (10:21 IST)
அமெரிக்காவில் ஊரடங்கு அமலில் உள்ளதை பயன்படுத்தி பொருட்களை அதிக விலைக்கு விற்ற இந்தியர் மீது மக்கள் புகார் அளித்துள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா தாக்கத்தால் உலக நாடுகள் பல முடங்கியுள்ள நிலையில் அமெரிக்காவிலும் பல மாகாணங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் கலிபொர்னியா மாகாணத்தில் மளிகைக்கடை நடத்தி வரும் ராஜ்விந்தர் சிங் என்பவர் ஊரடங்கை பயன்படுத்தி பொருட்களை அதிக விலைக்கு விற்றுள்ளார்.

பொருட்களின் தோராய விலையிலிருந்து சுமார் 200 மடங்கு விலையை அதிகமாக விற்றதாக பலர் ரசீதுடன் புகார் அளித்துள்ளனர். ராஜ்விந்தர்சிங் மீது அலமேடா கவுண்டி சுபீரியர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் ஓராண்டு வரை சிறை தண்டனையும், 10 ஆயிரம் டாலர் வரை அபராதமும் விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments