Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவர் தற்கொலை வழக்கில் ஆளும்கட்சி எம்.எல்.ஏ கைது: பெரும் பரபரப்பு

Webdunia
ஞாயிறு, 10 மே 2020 (10:07 IST)
டெல்லி ஆளும் கட்சியான ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ பிரகாஷ் ஜார்வால் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டதாக ராஜேந்தர் சிங் என்ற மருத்துவர் குறிப்பு எழுதி வைத்து தற்கொலை செய்த கொண்ட வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது அந்த ஆளும் கட்சி எம்எல்ஏ கைது செய்யப்பட்டுள்ளார்
 
டெல்லியை சேர்ந்த ராஜேந்திர சிங் என்ற மருத்துவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் அவர் எழுதி வைத்த குறிப்பில் ஆம் ஆத்மி எம்எல்ஏ பிரகாஷ் ஜார்வால் என்பவர் தன்னை மிரட்டி பணம் பறிக்க முயற்சி செய்வதாகவும் இதனால் அவருடைய தொல்லை தாங்காமல் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் இரண்டு பக்க கடிதம் எழுதி வைத்துள்ளார்
 
இந்த கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இது குறித்து விசாரணை செய்து வந்தனர். இந்த நிலையில் பிரகாஷ் ஜார்வால் விசாரணைக்கு அழைக்கப்பட்டதாகவும், அவரிடம் விசாரணை நடத்திய பின்னர் கைது செய்யப்பட்டதாகவும் அவருடன் அவருடைய உதவியாளரும் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. 
 
டெல்லி மருத்துவர் தற்கொலை வழக்கில் ஆளும் கட்சி எம்எல்ஏ ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது தலைநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments