Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனடாவில் இந்து கோவிலை உடைத்து கொள்ளையடித்த இந்தியரை கனடா காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளது.

Webdunia
வெள்ளி, 29 டிசம்பர் 2023 (18:29 IST)
கனடாவில் டொரண்டோ பகுதியில் இந்து கோவில்களில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவம் நடந்ததை அடுத்து சிசிடிவி கேமராவை வைத்து காவல்துறையினர் விசாரணை செய்தனர். அப்போது பதிவாகிய காட்சிகளை ஆய்வு செய்ததில் உண்டியல் பணத்தை கொள்ளை அடித்தது இந்தியர் என்பது தெரிய வந்தது
 
அவரை கனடா போலீஸ் கண்டுபிடித்து கைது செய்தனர். அவர் 41 வயது ஜெகதீஷ் என்பதும் பிராம்டன் நகரில் வாழ்ந்து வருவதாகவும் தெரிய வந்தது.  அவர் இந்து மதத்தின் மீது வெறுப்பு கொண்டோ அல்லது யாராலோ தூண்டப்பட்டோ இந்த கொள்ளையை செய்யவில்லை என்பது முதல் கட்ட விசாரணையில்  தெரிவித்துள்ளதாகவும் முழுக்க முழுக்க பணத்திற்காகவே இந்த கொள்ளை அடித்ததாகவும் தெரியவந்தது.  
 
மேலும் இந்த ஆண்டில் ஏற்கனவே பல கோயில்களில் அவர் கொள்ளையடித்துள்ளதும் விசாரணைகள் தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் முதல் ஏசி புறநகர் மின்சார ரயில்.. சோதனை ஓட்டம் நடத்த திட்டம்..!

மக்களை குடிக்கு அடிமையாகியதுதான் திராவிட மாடல்.. பொங்கல் மது விற்பனை குறித்து அன்புமணி..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. திமுக நாம் தமிழர் வேட்பாளர்களின் வேட்புமனு ஏற்பு..!

பரந்தூர் மக்களை சந்திக்க விஜய்க்கு கட்டுப்பாடு.. காவல்துறை அறிவிப்பு..!

விஜய் இந்தியா கூட்டணிக்கு வரவேண்டும்.. காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அழைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments