Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவம் வெளியேறியதா? இந்திய வெளியுறவுத்துறை கூறுவது என்ன?

Siva
செவ்வாய், 12 மார்ச் 2024 (15:30 IST)
மே பத்தாம் தேதிக்கு பிறகு இந்திய ராணுவ வீரர்கள் மாலத்தீவில் இருக்க மாட்டார்கள் என்று மாலத்தீவு அதிபர் கூறியிருந்த நிலையில் இந்திய ராணுவத்தின் ஒரு குழுவினர் நாடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
மாலத்தீவுக்கு மருத்துவ உதவி மற்றும் மனிதாபிமான சேவைகளுக்காக இந்திய ராணுவ வீரர்கள் சென்ற நிலையில் அவர்களை திரும்ப பெறுமாறு மாலத்தீவு அதிபர் மூயிஸ் இந்திய அரசிடம் சமீபத்தில் கூறியிருந்தார் 
 
இந்தியா மாலத்தீவு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்ட நிலையில் மே பத்தாம் தேதிக்குள் மாலத்தீவில் உள்ள இந்திய ராணு ராணுவ வீரர்கள் முற்றிலும் நாடு திரும்ப வேண்டும் என்றும் மூயிஸ் அறிவித்திருந்தார்.
 
இந்த நிலையில் மார்ச் 10ஆம் தேதி இந்திய வீரர்களின் முதல் குழு மாலத்தீவில் இருந்து இந்தியாவுக்கு திரும்பி உள்ளதாக மாலத்தீவில் உள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருக்கின்றன. இருப்பினும் இந்த தகவலை இந்திய வெளியுறவுத்துறை உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் மே பத்தாம் தேதிக்கு பிறகு மாலத்தீவில் ராணுவ உடையிலோ அல்லது சாதாரண உடையிலோ இந்திய ராணுவத்தினர் இருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மூயிஸ் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஆனாலும் டாக்டர்கள் சொன்ன அறிவுரை!

12 ஆயிரம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்! TCS எடுத்த அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!

ஆயுள் தண்டனை அல்லது 7 ஆண்டு சிறை தண்டனை.. தேர்வு செய்ய குற்றவாளிக்கு வாய்ப்பு அளித்த நீதிபதி..!

பில்கேட்ஸுக்கு பரிசாக கொடுத்த தூத்துக்குடி முத்து.. பிரதமர் மோடி அளித்த தகவல்..!

துபாய் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணுக்கு வேலை.. விமான நிலையத்தில் இறங்கியதும் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments