Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துரத்தி வந்த கடற்கொள்ளையர்? கினியா கடற்படையிடம் சிக்கிய இந்திய மாலுமிகள்!

Webdunia
ஞாயிறு, 6 நவம்பர் 2022 (12:06 IST)
கினியாவில் கச்சா எண்ணெய் ஏற்ற சென்ற கப்பலின் மாலுமிகளை கினியா கடற்படை கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியா கச்சா எண்ணெய் வணிகத்தில் முக்கிய நாடாக உள்ளது. இங்கு கச்சா எண்ணெய் ஏற்றி வருவதற்காக நார்வேவை சேர்ந்த கப்பல் ஒன்று சென்றுள்ளது. அப்போது கடற்கொள்ளையர்கள் அந்த கப்பலை மறித்ததால் அவர்கள் பாதுகாப்பான இடம் நோக்கி நகர்ந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த எண்ணெய் கப்பலை தடுத்து நிறுத்திய கினியா கடற்படையினர் அதில் இருந்த இந்திய மாலுமிகள் உள்பட 26 பேரை கைது செய்துள்ளனர். அந்த கப்பலும் கடற்படையால் பிடித்து வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அறிந்த கப்பல் நிறுவனம் கப்பலை மீட்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கப்பலில் பயணித்த இந்தியாவை சேர்ந்த மாலுமிகளை விடுவிக்க இந்திய தூதரகம் கினியாவுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Edited By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments