Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துரத்தி வந்த கடற்கொள்ளையர்? கினியா கடற்படையிடம் சிக்கிய இந்திய மாலுமிகள்!

Webdunia
ஞாயிறு, 6 நவம்பர் 2022 (12:06 IST)
கினியாவில் கச்சா எண்ணெய் ஏற்ற சென்ற கப்பலின் மாலுமிகளை கினியா கடற்படை கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியா கச்சா எண்ணெய் வணிகத்தில் முக்கிய நாடாக உள்ளது. இங்கு கச்சா எண்ணெய் ஏற்றி வருவதற்காக நார்வேவை சேர்ந்த கப்பல் ஒன்று சென்றுள்ளது. அப்போது கடற்கொள்ளையர்கள் அந்த கப்பலை மறித்ததால் அவர்கள் பாதுகாப்பான இடம் நோக்கி நகர்ந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த எண்ணெய் கப்பலை தடுத்து நிறுத்திய கினியா கடற்படையினர் அதில் இருந்த இந்திய மாலுமிகள் உள்பட 26 பேரை கைது செய்துள்ளனர். அந்த கப்பலும் கடற்படையால் பிடித்து வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அறிந்த கப்பல் நிறுவனம் கப்பலை மீட்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கப்பலில் பயணித்த இந்தியாவை சேர்ந்த மாலுமிகளை விடுவிக்க இந்திய தூதரகம் கினியாவுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Edited By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments