2 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு: அதிர்ச்சி தகவல்

Webdunia
செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (07:43 IST)
உலகில் சுமார் 200 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி மனித இனத்திற்கே சவால் விடுத்துள்ள நிலையில் தற்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலக அளவில் இரண்டு கோடியை தாண்டிவிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் உலக அளவில் 7.3 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பதும் 1.31 கோடி பேர் குணம் அடைந்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
அமெரிக்காவில் ஒரே நாளில் 49,033 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 52.50 லட்சமாக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 537 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 1.66 லட்சமாக அதிகரித்துள்ளது. 
 
பிரேசிலில் ஒரே நாளில் 21,888 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 30.57 லட்சமாக அதிகரித்துள்ளது என்பதும், கொரோனா  தொற்றால் ஒரே நாளில் 721 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 1.01 லட்சமாக அதிகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
சீனாவில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 84,668 ஆக அதிகரித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் நீர் தேக்கமில்லை; விஜய் வீட்டிலிருந்து பேசுகிறார்! டிகேஎஸ் இளங்கோவன்..!

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments