Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இத்தனை ஊரடங்கிற்கும் அடங்க மாட்டேங்குதே! – 21 லட்சத்தை கடந்த பாதிப்புகள்!

இத்தனை ஊரடங்கிற்கும் அடங்க மாட்டேங்குதே! – 21 லட்சத்தை கடந்த பாதிப்புகள்!
, ஞாயிறு, 9 ஆகஸ்ட் 2020 (11:15 IST)
இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டும் பாதிப்பு எண்ணிக்கை 21 லட்சத்தை கடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்தியாவில் கடந்த பல மாதங்களாக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. ஜூலை வரை கடுமையாக இருந்த ஊரடங்கு ஆகஸ்டு முதலாக மத்திய அரசால் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநில அரசுகள் ஊரடங்குகள் குறித்த முடிவுகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் இந்தியாவின் கொரோனா பாதிப்புகள் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 62,538 ஆக பதிவாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்புகள் 20,27,075 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமாக 43,379 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 14,80,885 பேர் குணமடைந்துள்ளனர். 6,28,747 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

”அப்பளம் சாப்பிட்டா கொரோனா வராது”ன்னு சொன்ன அமைச்சருக்கு கொரோனா!