Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 37 பேர் பலி

Webdunia
திங்கள், 26 மார்ச் 2018 (08:42 IST)
ரஷியாவின் சைபீரியா மாகாணத்தில் உள்ள ஷாப்பிங் மாலில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 37 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று விடுமுறை நாள் என்பதால் ரஷியாவின் சைபீரியா மாகாணத்தில் உள்ள பிரபல ஷாப்பிங் மாலில் பொதுமக்கள் பலர் ஆர்வமுடன் ஷாப்பிங் செய்து கொண்டிருந்தனர். யாரும் எதிர்பாரா விதமாய் திடீரென அந்த மாலில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கு குவிந்திருந்த மக்கள் அலறியடித்தபடி அங்குமிங்கும் ஓடினர். 
 
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், 12 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். 5 பேர் சம்பவ இடத்திலே பலியாகிய நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 32 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பலர் தீவிர சிக்கிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்திற்கு பெங்களூரு போலீஸ் அனுமதி மறுப்பு.. அப்புறம் எப்படி நடந்தது?

மீண்டும் ஒரு சவரன் ரூ.73,000ஐ தாண்டியது.. இன்று ஒரே நாளில் 320 ரூபாய் உயர்வு..!

தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய இ-ஆதார் கட்டாயம் என மத்திய ரயில்வே அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

ஆடிட்டர் குருமூர்த்தி, சைதை துரைச்சாமி, ராமதாஸ் வீட்டிற்கு வருகை.. தீவிர ஆலோசனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments