Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு முன்னதாகவே இம்ரான் கான் ராஜினாமா?

Webdunia
புதன், 30 மார்ச் 2022 (11:02 IST)
நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு முன்னதாகவே இம்ரான் கான் பிரதமர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளார் என தகவல். 

 
பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான ஆட்சி நடந்து வரும் நிலையில் கடந்த சில நாட்கள் முன்னதாக இம்ரான்கான் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்கட்சி அமளி செய்தது. அதன் விளைவாக நாளை நம்பிக்கையில்லா தீர்மானம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டு ஏப்ரல் 3 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
 
இந்நிலையில் இம்ரான்கான் கட்சிக்கு ஆதரவளித்து வந்த எம்.க்யூ.எம் கட்சி தற்போது தனது ஆதரவை எதிர்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு வழங்கியுள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைக்கு 172 இடங்கள் தேவையான நிலையில் எம்.க்யூ.எம் ஆதரவால் எதிர்கட்சி 177 இடங்களை கையில் வைத்துள்ளது. இதனால் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இம்ரான்கான் ஆட்சி கவிழ்க்கப்படும் என பேச்சு எழுந்துள்ளது.
 
இதனால் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு முன்னதாகவே இம்ரான் கான் பிரதமர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் அடுத்த பொதுத் தேர்தல் 2023 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன என்பது கூடுதல் தகவல். 

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments