Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிஆர்பிஎப் சாவடியில் குண்டு வீசிய பெண்! – ஜம்மு காஷ்மீரில் அதிர்ச்சி!

Webdunia
புதன், 30 மார்ச் 2022 (10:46 IST)
ஜம்மு காஷ்மீரில் சிஆர்பிஎப் சோதனை சாவடியில் பெண் ஒருவர் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் யூனியன் பிரதேசமாக இணைக்கப்பட்டது முதலாக அங்குள்ள பல்வேறு தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காஷ்மீரில் பயங்கரவாத சம்பவங்கள் நிகழ்வதை தடுக்க துணை ராணுவத்தினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று காஷ்மீரின் சோபோர் பகுதியில் உள்ள சிஆர்பிஎப் படையின் சோதனை பாதுகாப்பு சாவடி அருகே புர்கா அணிந்து வந்த பெண் ஒருவர் திடீரென வெடிகுண்டை கொளுத்தி சோதனை சாவடி மீது வீசிவிட்டு தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் சாவடி சேதமடைந்தாலும் உயிரிழப்புகள் ஏதும் இல்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த வீடியோவை சிஆர்பிஎப் வெளியிட்ட நிலையில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாராய அமைச்சரை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்திருக்கிறது.. அண்ணாமலை எக்ஸ் பதிவு..!

ஆர்.எஸ்.எஸ். கையில் கல்வி இருந்தால் நாடு அழிந்துவிடும்: ராகுல் காந்தி ஆவேசம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. இறக்குமதியாளர்களுக்கு லாபம்..!

செந்தில் பாலாஜிக்கு அமைச்சராக தொடர விருப்பமா? இல்லையா? 10 நாட்களில் பதிலளிக்க கெடு..!

வீடு முழுக்க மலம், சாக்கடை..! போலீஸும் இதற்கு உடந்தை!? - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments