Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் விமானக் கோளாறு.. பாகிஸ்தானில் தரையிறக்கம்! – பயணிகள் அதிர்ச்சி!

Webdunia
ஞாயிறு, 17 ஜூலை 2022 (11:08 IST)
அரபு அமீரகத்திலிருந்து இந்தியா புறப்பட்ட விமானம் ஒன்று கோளாறு காரணமாக அவசரமாக கராச்சியில் தறையிறக்கப்பட்டுள்ளது.

இண்டிகோ நிறுவன விமானம் ஒன்று அமீரகத்தின் ஷார்ஜாவிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு இந்தியாவின் ஐதராபாத் நோக்கி பயணித்தது. நடுவானில் விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் விமானம் அவசர அவசரமாக பாகிஸ்தான் நாட்டின் கராச்சி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விமான நிறுவன அதிகாரிகள் கூறும்போது ஷார்ஜா - ஐதராபாத் விமானம் நடுவானில் பறந்துக் கொண்டிருந்தபோது விமானத்தில் கோளாறு இருப்பது விமானிக்கு தெரிந்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உடனடியாக விமானம் பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது என தெரிவித்துள்ளனர்.

அந்த விமானத்தில் இருந்த பயணிகளை ஐதராபாத் அழைத்து வருவதற்காக சிறப்பு விமானம் ஒன்று கராச்சிக்கு அனுப்பப்பட்டுள்ளது. கடந்த வாரமும் ஒரு விமானம் தொழில்நுட்ப கோளாறால் பாகிஸ்தானில் தரையிறங்கிய நிலையில் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று சிஎஸ்கே - ஆர்சிபி போட்டி.. சென்னை சேப்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்..!

இந்த ஆண்டு முதல் மூன்று CA தேர்வுகள்: தேர்ச்சி விகிதம் அதிகமாக வாய்ப்பு..!

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments