Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓராண்டில் பிரிட்டன் சென்ற இந்தியர்கள் இத்தனை லட்சமா ?

Webdunia
சனி, 24 ஆகஸ்ட் 2019 (18:00 IST)
நம் இந்திய நாட்டிலிருந்து கடந்த ஓராண்டு காலமாக, பிரிட்டன் செல்வோரின் எண்ணிக்கை 5 லட்சத்துக்கு மேல் உயர்ந்துள்ளதாக பிரிட்டன் தேசிய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
 பிரிட்டன் தேசிய புள்ளி விரங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் ;
 
கடந்த வருடம் (2018) ஜுலை தொடங்கி 2019 ஜூன் வரையிலான காலத்தில், இங்கிலாந்து நாட்டிற்கு சென்ற இந்தியர்களின் எண்ணிக்கை 5 லட்சத்துக்க்கு 3 ஆயிரம் பேர் எனத் தெரிவிக்கபட்டுள்ளது. 
 
முக்கியமாக  இந்தியாவில் இருந்து, பிரிட்டன் சென்று கல்வி பயில்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது கடந்த 3 ஆண்டுகளில் மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாகவும்.  கடந்த ஓராண்டில் 22000 இந்தியர்கள் கல்வி விசா பெற்று இருப்பதாகவும் தெரிவிக்கின்றன.
 
மேலும் பிரிட்டனில் திறன் மிக்க வேலைக்கான விசாக்களை 56, 000 இந்தியர்கள் பெற்றுள்ளனர். இது மற்ற நாடுகளை ஒப்பிடும் போது 52 % அதிகம் என்று குறிப்பிட்டுள்ளனர். 
 
இதுதொடர்பாக இந்தியாவுக்கான பிரிட்டன் தூதர் டொமினிக் கூறியுள்ளதாவது : இந்தியர்கள் ப்ரிட்டனுக்கு வருவது அதிகரித்துள்ளது மகிழ்ச்சி. பிரிட்டனின் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை பார்க்க வந்த இந்தியர்கள் எண்ணிக்கை கற்பனை செய்ததைவிட அதிகம் என்றும் அவர் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments