Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துருக்கி ஓட்டலில் பயங்கர தீ விபத்து.. 10 பேர் பரிதாப பலி..!

Siva
செவ்வாய், 21 ஜனவரி 2025 (17:31 IST)
துருக்கி பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று அதிகாலை 3:30 திடீரென தீ விபத்து நடந்த நிலையில் இந்த தீ விபத்து  காரணமாக ஹோட்டலில் இருந்த 10 பேர் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் வந்து கடுமையான போராட்டத்திற்கு பின் தீயை அணைத்ததாகவும் தீயை அணைத்த பின்னர் தான் தீ விபத்தில் சிக்கி 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என்பது தெரியவந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

மேலும் 32 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. தீ விபத்துக்குள்ளான ஓட்டலில் 234 பேர் தங்கி இருந்தனர் என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் அந்த ஓட்டலில் உள்ள தங்கி இருந்தவர்கள் உடனடியாக மாற்றுப் பாதையில் வெளியேற்றப்பட்டதால் உயிர் பலி குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தீ விபத்துக்கான காரணம் குறித்து துருக்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments