Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரே நாளில் 1974 பேர் கொரோனாவால் மரணம்: ஆடிப்போன அமெரிக்கா!

ஒரே நாளில் 1974 பேர் கொரோனாவால் மரணம்: ஆடிப்போன அமெரிக்கா!
, வெள்ளி, 20 நவம்பர் 2020 (07:20 IST)
அமெரிக்காவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 1974 பேர் மரணம் அடைந்துள்ளதால் அந்நாட்டு மக்கள் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றுள்ளனர்.
 
அமெரிக்காவை அடுத்து இத்தாலியில் நேற்று ஒரு நாளில் மட்டும் 653 பேர் மரணம் கொரோனாவால் அடைந்துள்ளதாகவும், பிரேசிலில் கொரோனாவால் ஒரே நாளில் 644 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும், போலந்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில்  637 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது
 
இந்தியாவில் கொரோனா தொற்றால் 584 பேர் ஒரே நாளில் மரணம் அடைந்துள்ளதாகவும் உலகிலேயே அதிகபட்சமாக நேற்று அமெரிக்காவில் 181,099 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாகவும், இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 46182 பேருக்கு உறுதி செய்யப்பட்டதாகவும், இத்தாலியில் 36176 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாகவும், உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது
 
உலகில் கொரோனா தொற்றால் இதுவரை  5,72,06,666 பேர் பாதிப்பு அடைந்துள்ளதாகவும் உலகில் கொரோனா தொற்றால் இதுவரை  13,64,754 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும் உலகில் கொரோனா பாதிப்பில் இருந்து 3,96,94,917 பேர் இதுவரை மீண்டுள்ளனர் என்றும், உலகில் கொரோனா பாதிப்புடன் 1,61,46,995 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியா - சீனா எல்லை மோதல்: மைக்ரோ வேவ் ஆயுதங்கள் ஆயுதங்களை பயன்படுத்தியதா சீனா? அப்படி என்றால் என்ன?