Publish Date: Sat, 28 Mar 2020 (16:04 IST)
Updated Date: Sat, 28 Mar 2020 (16:09 IST)
கூகுளின் அட்டகாசமான’’புதிய 3 D தொழில்நுட்பம்’’.... நெட்டிசன்கள் கொண்டாட்டம் !
வனவிலங்குகளை வீட்டுக்குள் கொண்டுவரும் கூகுளில் அட்டகாசமான புதிய 3 தொழில்நுட்பம் இணையதளத்தில் வைரலாவதால் வலைதளவாசிகள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.
கடந்த வருடம் அமேசான், ஆஸ்திரேலியா, இந்தியாவில் நீலகிரி போன்ற இடங்களில் ஏற்பட்ட கடுமையான காட்டுத்தீ விபத்துகளால் அப்பாவியான விலங்குகள் தீயில் கருவி மாண்டன.
மேலும், ஆசிய சிங்கம் ,கருப்பு சிறுத்தை, புலிகள்,யானைகளின் எண்ணிக்கை எல்லாம் அருகி வருவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் புவிவெப்பமயமாதல், காடுகள் அழிப்பு ஆகியவை தொடர்ந்து வந்தால் மக்கள் இனிமேல் காடுகளில் விலங்குகளைப்பார்க்கவே முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதைக்கருத்தில் கொண்டும் விலங்குகளை நேசிக்கவும் வேண்டி, கூகுள் தற்போது ஒரு புதிய '3 டி தொழில்நுட்ப புகைப்படத்தை' அறிமுகம் செய்துள்ளது.
அதில், வனவிலங்குகளை வீட்டுக்குள் கொண்டு வந்து அதனுடன் ஆசை தீர கொஞ்சி மகிழலாம் என்பதால் கூகுளின் புதிய 3 டிக்கு நெட்டிசன்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் உண்மையான் உயிர்கள் துன்புறுத்தபட்டுவது குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.
sinoj
Publish Date: Sat, 28 Mar 2020 (16:04 IST)
Updated Date: Sat, 28 Mar 2020 (16:09 IST)