Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆண்ட்ராய்டை முறைகேடாக பயன்படுத்திய கூகுள் நிறுவனத்துக்கு ரூ.3.42 லட்சம் கோடி அபராதம்

Webdunia
வியாழன், 19 ஜூலை 2018 (13:45 IST)
இணையதளத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட கூகுள் நிறுவனம்  ஆண்ட்ராய்ட் அமைப்பை முறைகேடாக பயன்படுத்தியதாக ஐரோப்பிய யூனியன் ரூ.3.42 லட்சம் கோடி அபராதம் விதித்துள்ளது.

 
இணைய உலகில் முதல் இடத்தில் இருக்கும் பிரபல தேடுபொறியான கூகுள் நிறுவனம் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட ஆண்ட்ராய்ட் அமைப்பை விதிகளை மீறி பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. இதன்மூலம் தன்னுடைய கூகுள் க்ரோம் மற்றும் கூகுள் பிரவுசரின் பயன்பாட்டை அதிகரித்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
 
இந்த குற்றச்சாட்டு மீதான விசாரணை கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. ஐரோப்பிய யூனியன் விதிகளை மீறிய குற்றத்திற்காக கூகுள் நிறுவனத்துக்கு 500 கோடி அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், கூகுள் நிறுவனம் இந்த சட்டவிரோதமான செயல்பாட்டை 90 நாட்களுக்குள் நிறுத்த வேண்டும். மீறினால் தினசரி வருவாயில் 5% ஜரோப்பிய யூனியனுக்கு செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments