Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல் காந்தி தகுதிநீக்க விவகாரம்: அமெரிக்காவை அடுத்து ஜெர்மனியும் கருத்து..!

Webdunia
வியாழன், 30 மார்ச் 2023 (13:25 IST)
ராகுல் காந்தியின் எம்பி பதவி தகுதி நீக்கம் குறித்து ஏற்கனவே அமெரிக்கா கருத்து தெரிவித்திருந்த நிலையில் தற்போது ஜெர்மனியும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளது. ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து அவர் எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இது குறித்து அமெரிக்கா கருத்து தெரிவிக்கையில் ராகுல் காந்தி விவகாரம் குறித்து நீதிமன்ற நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று கூறியிருந்தது. 
 
இந்த நிலையில் ராகுல் காந்தியின் தகுதி நீக்க விவகாரத்தில் ஜனநாயக கொள்கைகளை எதிர்பார்க்கிறோம் என்று ஜெர்மனி கருத்து தெரிவித்துள்ளது. இது குறித்து ஜெர்மனியின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறியபோது இந்தியாவில் எதிர்க்கட்சியை சேர்ந்த அரசியல்வாதிக்கு முதல்முறையாக விதிக்கப்பட்ட தீர்ப்பு பற்றிய விவரங்களை நாங்கள் கவனத்தில் கொண்டிருக்கின்றோம். அவரது நாடாளுமன்ற எம்பி பதவி முடக்கம் பற்றியும் கவனம் கொண்டுள்ளோம் 
 
நாங்கள் அறிந்தவரை மேல்முறையீடு செய்யக்கூடிய நிலையில் ராகுல் காந்தி இருக்கிறார் என்றும் இன்று தீர்ப்பு நிலையானது இல்லை என்றும் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது பதவி முடக்கம் ஏதேனும் ஒரு அடிப்படையில் உள்ளதா என்பதை பற்றி விரைவில் தெளிவாக தெரிய வரும் என்று அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments