Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உக்ரரைன் மீதான போருக்கு எதிராக ஓவியம்: சிறுமியின் தந்தைக்கு சிறைத்தண்டனை!

Advertiesment
Ukraine
, புதன், 29 மார்ச் 2023 (21:07 IST)
உக்ரைன் மீது ரஷியாவின் போருக்கு எதிரான ஓவியம் வரைந்த சிறுமியின் தந்தைக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் நாட்டின் மீது ரஷிய ராணுவ போர் தொடுத்து  1 ஆண்டு நிறைவடைந்துள்ளது. ரஷியாவுக்கு எதிராக உக்ரைனுக்கு ஆதரவாக மேற்கு உலக நாடுகள் நேட்டோ கூட்டமைப்பும், உக்ரைன் நாட்டிற்கு நிதியுதவியும், ஆயுதத் தளவாடங்களும் அளித்து உதவி வருகின்றன. இதனால், உக்ரைன் நாடு, வல்லரசான ரஷியாவுக்கு எதிராகப் போரிட்டு, பதிலடி கொடுத்து வருகிறது.

ரஷியாவிலேயே, உக்ரைன் மீதான போருக்கு பலரும் எதிர்ப்புகள் கூறி வருகின்றனர். சமீபத்தில் மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், கடந்தாண்டு அலெக்சி மொஸ்கலியயோவ் என்ற நபரில் மகள் மரியா, தன் பள்ளியில் ஒரு ஓவிய வரைந்தார். அதில், உக்ரேன் நாட்டுக் கொடியுடன் ஒரு பெண்ணும், அவருடன் குழந்தையை நோக்கி, ரஷிய கொடி மற்றும் ஏவுகணைகள் வரைந்திருந்தார்.

இதுகுறித்து, பள்ளி தலைமையாசிரியர் போலீஸில் புகாரளித்தார். இதையடுத்து, ராணுவத்தை இழிவுபடுத்தியதாக, சிறுமி வரைந்த ஓவியத்திற்கு, அலெக்சி மீது வழக்குப் பதிவு செய்து, சிறுமியை சிறுவர்கள் காப்பக்கத்தில் வைத்தனர்.

இந்த வழக்கில் வீட்டுக்காவலில் இருந்த அலெக்சிக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவர் தப்பியோடிவிட்டார். தற்போது போலீஸார் அவரை தேடி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

துப்பாக்கிக் குண்டுகள் மாயம்! அதிபரின் உத்தரவால் அதிகாரிகள் நடுக்கம்!