காசா கட்டுப்பாட்டை இழந்த ஹமாஸ்.. சொத்துக்களை சூறையாடும் பொதுமக்கள்..!

Webdunia
செவ்வாய், 14 நவம்பர் 2023 (07:49 IST)
கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையே கடும் போர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது காசாவில் ஹமாஸ் தனது கட்டுப்பாட்டை இழந்து விட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. மேலும் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் பொதுமக்கள் சூறையாடத் தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.  

இஸ்ரேல் ராணுவம் காசா மீது கடந்த சில நாட்களாக சரமாரியாக தாக்குதல் நடத்தி வருகிறது. மருத்துவமனை உள்பட பொதுமக்கள் பயன்படுத்தும் இடங்களிலும் ராணுவ வீரர்கள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஹமாஸ்  கட்டுப்பாட்டில் காசா இதுவரை இருந்த நிலையில் தற்போது இஸ்ரேல் ராணுவம் நெருங்கி வருவதால் பயங்கரவாதிகள் தெற்கு நோக்கி தப்பி ஓடிவிட்டதாகவும், இதனால் ஹமாஸ் அமைப்பில் உள்ள பொருட்களை பொதுமக்கள் சூறையாடி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

ஹமாஸ் அமைப்பின் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை இல்லை என்று இஸ்ரேல் அமைச்சர் ஒருவர் கூறியுள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக தங்கத்தையே கொடுத்தாலும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்: செல்லூர் ராஜு

இருமுடி கட்டி போவாங்க! விஜய் ரசிகர் செய்த செயலால் கடுப்பான நெட்டிசன்கள்

கொல்கத்தா நிகழ்வின்போது ஏற்பட்ட குழப்பம்.. மெஸ்ஸியிடம் மம்தா பானர்ஜி வருத்தம்!

யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது: வீட்டின் கதவை உடைத்து கைது செய்ததாக தகவல்..!

கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் மெஸ்ஸி ரசிகர்கள் ரகளை: ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments