Publish Date: Mon, 27 Jan 2020 (20:18 IST)
Updated Date: Mon, 27 Jan 2020 (20:21 IST)
ஆஃப்கானிஸ்தானில் பயணிகள் விமானம் விபத்தில் சிக்கிய நிலையில் 83 பேர் பலியாகிருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
ஆஃப்கானிஸ்தான் நாட்டின் ஹெராத் நகரிலிருந்து தலைநகர் காபூலுக்கு கிளம்பிய பயணிகள் விமானம் ஒன்று, டேஹ்யாக் மாவட்டத்தில் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் 83 பேர் உயிரிழந்திருக்கூடும் என அஞ்சப்படுகின்றது. விபத்துக்குறித்த காரணங்கள் பயணிகளின் நிலை என்ன என்பது குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என அறியப்படுகிறது.