Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரஷியாவுக்கு எதிராக நேட்டோ அமைப்பில் இணையும் பின்லாந்து நாடு!

natto
, திங்கள், 3 ஏப்ரல் 2023 (21:52 IST)
நேட்டோ அமைப்பில்  31 வது  நாடாக பின்லாந்து நாடு இணையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பு நேட்டோ அமைப்பாகும். இந்த  நேட்டோ கூட்டமைப்பு தான் தற்போது, உக்ரைன் மீதான ரஷிய போரில், உக்ரைனுக்கு  நிதி மற்றும் ஆயுத உதவி செய்து வருகிறது.

இந்த நிலையில், இந்த நேட்டோ கூட்டமைப்பில், ஏற்கனவே பல நாடுகள் இணைந்துள்ள நிலையில், உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தைப் பிடித்து வரும் பின்லாந்து நாடு இணையவுள்ளது.

மேலும், நாளை பின்லாந்து நாடு நேட்டோ கூட்டமைப்பில் இணையவுள்ளதாக அந்த நாடு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த கூட்டமைப்பில் கடைசி நாடாக துருக்கி இணைந்திருந்த நிலையில் நாளை நேட்டோ அலுவலகத்தில் பின்லாந்து நாட்டின் கொடி ஏற்றப்பட்டவுள்ளது. இந்த  நிகழ்ச்சியில், அந்த நாட்டு அதிபர் செளலி நினிஸ்டோ, பாதுகாப்பு அமைச்சர் கைகொனென், வெளியுறவு அமைச்சர்   ஹாவிஸ்டோ ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

உக்ரைனுக்கு அதிக ஆதரவளிக்க நேட்டோவை வலியுறுத்துவதாக பின்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

விரைவில் ஸ்வீடனும் நேட்டோவில் இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குஜராத் மாநிலத்தில் அணுகுண்டு வைக்கத் திட்டம்:யாசின் பட்கல் மீது வழக்குப் பதிவு