Publish Date: Fri, 01 Feb 2019 (16:08 IST)
Updated Date: Fri, 01 Feb 2019 (16:10 IST)
கனடாவில் வளர்ப்பு மகள்களை தந்தையே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவை சேர்ந்த நபர் ஒருவர் 4 பெண் பிள்ளைகளை தத்தெடுத்து வளர்த்து வந்தார். முதலில் குழந்தைகளை பாசமாக வளர்த்து வந்த நபர், குழந்தைகள் பெரிதாக பெரிதாக அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளான்.
தினமும் தமது பெண்ளை கொடுமைபடுத்தி அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளான். இவனின் கொடுமையை தாங்க முடியாத பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசார் விசாரணையில் அந்த அயோக்கியன் பெண்களை 600 முறைக்கு மேல் சீரழித்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவன் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்துள்ளனர். அவனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படலாம் என சொல்லப்படுகிறது.