Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேட்டரி, சுத்திகரிப்பான்களுடன் வருகிறது எலக்ட்ரானிக் மாஸ்க்!

Webdunia
வியாழன், 10 செப்டம்பர் 2020 (17:56 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலக சுகாதார மையம் முதல் உள்ளூர் சுகாதார அமைச்சகம் வரை மாஸ்க் அணிய வேண்டும் என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது என்பதும் இந்தியா உட்பட பல நாடுகளில் மாஸ்க் அணியாமல் வெளியேறும் பொதுமக்களுக்கு அபராத தொகை விதிக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
மேலும் இந்த மாஸ்க் அணியும் விவகாரம் என்பது இன்னும் நீண்ட மாதங்களுக்கு இருக்கும் என்றும் ஒருவேளை நிரந்தரமாக்கபட்டால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் மாஸ்குகளின் தரம் குறித்து பல்வேறு சர்ச்சைக்குரிய செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் தென் கொரியாவைச் சேர்ந்த நிறுவனமொன்று எலக்ட்ரானிக் மாஸ்க் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது
 
இந்த மாஸ்க்கில் காற்றில் இருக்கும் மாசு சுத்தம் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாஸ்க்கை நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம் என்றும் பேட்டரியுடன் இயங்கும் இந்த மாஸ்க்கில் சுத்திகரிப்பான்கள் இணைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது
 
இந்த சுத்திகரிப்பான் உள்ளே வரும் காற்று மற்றும் வெளியேறும் காற்றையும் தூய்மையாக்கும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது பேட்டரியின் வேகத்தையும் சுவாசத்திற்கு ஏற்பவும், சுத்திகரிப்பு வேகத்தையும் மாற்றிக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த மாஸ்க் உலகம் முழுவதும் மிக விரைவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments