Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் பற்றி எரியும் பெய்ரூட் துறைமுகம்! – லெபனானில் பரபரப்பு!

Webdunia
வியாழன், 10 செப்டம்பர் 2020 (17:49 IST)
கடந்த மாதம் லெபனான் நாட்டின் பெய்ரூட் துறைமுகத்தில் நடந்த வெடிவிபத்தின் பாதிப்பே குறையாத நிலையில் மீண்டும் ஒரு துயர சம்பவம் நடந்துள்ளது.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுக கிடங்கில் வெடிப்பொருட்கள் வெடித்த சம்பவம் கடந்த மாதத்தில் உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அதன் பாதிப்பிலிருந்து மக்கள் மெல்ல மீண்டு வரும் நிலையில் மீண்டும் ஒரு வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது.

பெய்ரூட் துறைமுகத்தில் இயந்திட எண்ணெய்,டயர்கள் வைத்திருந்த கிடங்கில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. தீயை அணைக்கவும் பாதிக்கப்பட்டவர்களை மீட்கவும் லெபனான் ராணுவம் விரைந்துள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிப்பு குறித்து இன்னமும் தகவல்கள் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments