Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாஸ்க் இல்லையா? 5 ரூபாய் கொடுத்து கண்டக்டரிடம் வாங்கிக்கொள்ளுங்கள்: அமைச்சர் அறிவிப்பு

மாஸ்க் இல்லையா? 5 ரூபாய் கொடுத்து கண்டக்டரிடம் வாங்கிக்கொள்ளுங்கள்: அமைச்சர் அறிவிப்பு
, திங்கள், 7 செப்டம்பர் 2020 (16:44 IST)
மாஸ்க் இல்லையா? 5 ரூபாய் கொடுத்து கண்டக்டரிடம் வாங்கிக்கொள்ளுங்கள்
இன்று முதல் மாநிலம் முழுவதும் பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் அனைவரும் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. 
 
இந்த நிலையில் இன்று கரூரில் பேருந்துகள் இயங்குவது குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் அவர்கள் ஆய்வு செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது ’தமிழகத்தில் பேருந்துகள் இயக்குவதற்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. அனைத்து பேருந்துகளிலும் சானிடைசர் வைக்கப்பட்டுள்ளது. பயணிகள் கண்டிப்பாக பேருந்துகளில் பயணம் செய்யும்போது மாஸ்க் அணிய வேண்டும். ஒருவேளை பயணிகளிடம் மாஸ்க் இல்லாமல் இருந்தால் கண்டக்டரிடம் ரூபாய் ஐந்து ரூபாய் செலுத்தி புதிய மாஸ்க் வாங்கி அணிந்துகொள்ளலாம்’ என்று கூறினார்.
 
ஒவ்வொரு பேருந்தின் கண்டக்டர்களிடம் பயணிகளுக்கு தேவையான மாஸ்க்குகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கண்டக்டர் மற்றும் டிரைவர் ஆகிய இருவருக்கும் சிறப்பு அம்சங்களுடன் கூடிய மாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
 
எனவே மாஸ்க் இல்லாமல் சென்றாலும் கண்டக்டரிடம் வாங்கி அணிந்து கொண்டு பயணிகள் பயணம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசின் இந்த ஏற்பாட்டுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மறுபடியும் முதல்ல இருந்தா..! முகக்கவசத்தில் #இந்தி தெரியாது போடா!