Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் இருக்கிறோமா அல்லது வெளிநாட்டில் இருக்கிறோமா என்ற சந்தேகம்.! முதல்வர் மு.க ஸ்டாலின்.!!

Senthil Velan
திங்கள், 5 பிப்ரவரி 2024 (12:51 IST)
பல நாடுகளுக்கு சென்று இருந்தாலும், ஸ்பெயின் நாட்டில் உள்ள தமிழ் மக்களை சந்திப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டிற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளை நேரில் சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள வலியுறுத்தி வருகிறார்.
 
இந்நிலையில் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற தமிழ் கலாச்சார நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் மு.க ஸ்டாலின், இங்குள்ள தமிழர்களை பார்க்கும்போது,  தமிழ்நாட்டில் இருக்கிறோமா அல்லது வெளிநாட்டில் இருக்கிறோமா என்ற சந்தேகம் உள்ளதாக தெரிவித்தார்.
 
ஸ்பெயின் நாட்டிற்கு வருவது இதுதான் முதல் முறை என்றும் ஆனால் பலமுறை வந்தது போல உணவு ஏற்பட்டுள்ளது என்றும் முதல்வர் கூறினார்.
 
பல நாடுகளுக்கு சென்று இருந்தாலும், ஸ்பெயின் நாட்டில் உள்ள தமிழ் மக்களை சந்திப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்த அவர், உங்களால் முடிந்த அளவிற்கு தாய் தமிழ்நாட்டிற்கு உதவிகளை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

ALSO READ: மாயனூர் கதவணையை வந்தடைந்த காவிரி நீர்..! விவசாயிகள் மகிழ்ச்சி..!!
 
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி, தமிழ்நாட்டிற்கு பெருமை தேடித் தந்துள்ளதாகவும் முதல்வர் மு க ஸ்டாலின் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments