Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திருமா பதிவிட்ட புகைப்படம்….இந்த நபரை கைது செய்ய வேண்டும் ஹெச்.ராஜா டுவீட்

திருமா பதிவிட்ட புகைப்படம்….இந்த நபரை கைது செய்ய வேண்டும் ஹெச்.ராஜா டுவீட்
, வியாழன், 28 மே 2020 (23:03 IST)
திருமாவளவன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், டொனால்ட் ட்ரம்ப் சம்மன் இல்லாமலே ஆஜராகத் துடிக்கிறார்.பாகிஸ்தானோடு உரசல்,சீனாவோடு சிக்கல் வரும்போதெல்லாம் பஞ்சாயத்து பண்ண 'நான்ரெடி நீங்கரெடியா'என்கிறார்?அவர் மோடிக்குஆதரவாகப் பேசுகிறாரா?கிண்டல் பண்ணுகிறாரா?இந்திய-சீன எல்லையிலோ நம்படையினர் 'திரும்பிபோ'எனபதாகை பிடிக்கின்றனர்! என தெரிவித்து ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

இதற்கு ஹெச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது : இந்த பதாகை போலியானது. மோடி அவர்கள் மீது உள்ள வன்மத்தால் இந்திய ராணுவத்தை அவமானம் செய்துள்ள இந்த நபரை அரசு உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இனவெறியால் ஒருவரை கழுத்து நெறித்து கொன்ற போலீஸ்காரர்