Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுவனின் தலையை கடித்துக் குதறிய நாய் ! நாய் இருந்தால் ஜாக்கிரதை..

Webdunia
வியாழன், 11 ஜூலை 2019 (15:52 IST)
பிரான்ஸ் நாட்டில் வால் டி ஒய்ஸ்ல் என்ற பகுதியில் 9பது வயது சிறுவனை, உயர் ரக  நாய் ஒன்று கடித்து குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த திங்கட்கிழமை அன்று ஒரு சிறுவன் தன் தாயுடன்  வாவ் டி ஒய்ஸ்ல் என்ற பகுதியில் நடந்துசென்றுகொண்டிருந்தான். 
 
அப்போது, அங்கிருந்த ஒரு உயர் ரக நாய் ஒன்று, சிறுவன் மீது பாய்ந்து, அவனை கீழே தள்ளிக் கடித்துள்ளது. இதனைப் பார்த்த அவனது தாய் பதறியடித்து கூச்சல் போட அவரையும் கடித்துள்ளது நாய். பின்னர்  அருகில் இருந்தவர்கள் நாயை விரட்டிவிட்டு சிறுவனையும், அவனது தாயாரையும்  மீட்டு மருத்துவமனையில் சேர்கப்பட்டு தற்போது இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
சிறுவன் மற்றும் அவனது தாயை கடித்த நாய், ரோட்வீலர் ரக இனத்தைச் சேர்ந்தது என்று தகவல்கள் வெளியாகிறது.
 
இந்த சம்பவம் ,குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அந்த நாய்க்கு உரிமையாளர் யாருமே இல்லை என்பதுதான். இந்த சம்பவம்  அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments