Publish Date: Thu, 03 May 2018 (12:09 IST)
Updated Date: Thu, 03 May 2018 (12:14 IST)
இந்த உலகத்தை ஒரு காலத்தில் மிகப் பெரிய உயிரினமான டைனோசர்கள் ஆய்து வந்தது. சுமார் 23 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றி, 16 கோடி ஆண்டுகள் வாழ்ந்துள்ளன.
அதன் பின்னர் 6.5 கோடி ஆண்டுகளுக்கு முன் இந்த இனமே அழிந்துவிட்டது. விண்கல்லின் தாக்கத்தால் இவை அழிந்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனாலும், பல்வேறு நாடுகள் மேற்கொள்ளும் ஆராய்ச்சிகளில் டைனோசர்களின் எலும்புகலூம், முட்டகலும், கால்தடங்களும் கிடைக்கின்றன.
இந்த ஆராய்ச்சிகளின் ஒரு பகுதியாக சமீபத்தில் 10 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பறவையின் படிமங்களை வைத்து ஆராய்ச்சி செய்யப்பட்டது. அதில் டைனோசர்கள் குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறிப்பிட்ட பறவையின் பற்கள் டைனோசர்கலின் பற்களை போல் இருந்துள்ளது. அதோடு ஆராய்ச்சியில் ஈடுப்படுத்தப்பட்ட பறவையின் உடலமைப்பு தற்போதும் சில பறவைகளில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, சிறிய வகை டைனோசர்கள் பரிணாம வளர்ச்சி காரணமாக பறவைகளாக வாழ்ந்து வருகின்ரன என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.