Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவால் வேலை இழக்கும் 2.5 கோடி மக்கள்: அதிர்ச்சி தகவல்

Webdunia
வியாழன், 19 மார்ச் 2020 (11:14 IST)
கொரோனாவால் வேலை இழக்கும் 2.5 கோடி மக்கள்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் மட்டுமின்றி லட்சக்கணக்கான கோடி பொருளாதாரமும் சரிவடைந்துள்ளது. அனைத்து தொழில்களும் உலகம் முழுவதும் முடங்கியுள்ளதால் சுமார் 2.5 கோடி மக்கள் வேலை இழக்கும் அபாயம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான தொழிலாளர் நல அமைப்பு மதிப்பீடு செய்துள்ளது.
 
கொரோனா பீதியால் பங்குச் சந்தைகள் வரலாறு காணாத வகையில் கடுமையாக வீழ்ச்சி அடைந்து வருகின்றன. கச்சா எண்ணெய் விலையும் மிக மோசமாக சரிந்துள்ளது. இதனையடுத்து கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் சுமார் 2.5 கோடி மக்கள் வேலைகளை இழப்பார்கள் என்றும், இதனால் 3 கோடியே 40 லட்சம் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு வருமான இழப்பு நேரிடும் எனவும், ஐக்கிய நாடுகள் சபைக்கான தொழிலாளர் நல அமைப்பு தெரிவித்துள்ளது.
 
ஆனாலும் கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை சரிசெய்ய சர்வதேச அளவில் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து உருவாக்கும் கொள்கை முடிவின் மூலம் இந்த மதிப்பீட்டு எண்ணிக்கையை விரைவில் குறைக்கலாம் என்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கான தொழிலாளர் நல அமைப்பு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சமூக மேம்பாடு, குழந்தைகள் பாதுகாப்பு! சென்னையில் 10 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள்!

அரசு ஊழியர்கள் புத்தகம் எழுத அனுமதி தேவையில்லை.. ஆனால்..? - தமிழக அரசு புதிய நிபந்தனை!

நேஷனல் ஹெரால்டு விவகாரம்: நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்த காங்கிரஸ்..!

மக்களின் குறைகளை நிறைவேற்ற வக்கில்லாத திமுக அரசு, ஒரு Coma அரசு! ஈபிஎஸ் ஆவேசம்..!

உயிரினங்கள் வாழும் பிரம்மாண்ட கிரகம்! கண்டுபிடித்து உலகிற்கு சொன்ன இந்திய வம்சாவளி விஞ்ஞானி!

அடுத்த கட்டுரையில்
Show comments