Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா வைரஸ் பாதித்தவரை சுட்டுக்கொன்ற அதிகாரிகள்: வடகொரியாவில் பரபரப்பு

Webdunia
வெள்ளி, 14 பிப்ரவரி 2020 (22:50 IST)
கொரோனா வைரஸ் பாதித்தவரை சுட்டுக்கொன்ற அதிகாரிகள்
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் 1500க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருப்பதாகவும், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. கொரோனா வைரசால் அந்நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து இருப்பதாகவும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி முற்றிலும் தடை பெற்றிருப்பதாகவும் சீனாவில் இருந்து வெளிநாடு செல்லும் விமானங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சீனா வரும் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது 
 
இந்த நிலையில் சீனாவில் மட்டுமின்றி அண்டை நாடுகளிலும் இந்த கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதால் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது. இதனை அடுத்து வடகொரியாவில் வைரஸ் பாதிப்பு ஒரு சிலருக்கு இருப்பதாகவும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்கள் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் வட கொரியாவை சேர்ந்த ஒருவருக்கு வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர் தனிமைப்படுத்தப்பட்டு வீட்டை விட்டு வேறு எங்கும் செல்லக்கூடாது என அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிகிறது. ஆனால் இதனையும் மீறி அவர் வெளியே சென்றதாகவும் இதனையடுத்து அதிகாரிகள் வைரஸ் பாதித்த அந்த நபரை சுட்டுக் கொன்றதாகவும் கூறப்படுகிறது
 
இருப்பினும் வட கொரிய அரசு இதனை மறுத்துள்ளது. தங்கள் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்படைந்த யாருமில்லை என்றும் இந்த தகவல் வதந்தி என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments