Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொஞ்சம் கூட அணைக்க முடியல; பற்றி எரியும் 20 ஆயிரம் ஏக்கர் காடு!

Webdunia
திங்கள், 3 ஆகஸ்ட் 2020 (10:58 IST)
கலிபொர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயால் பல்வேறு வாழ்விடங்கள் தீக்கிரையாகி உள்ள நிலையில் தீயை அணைக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அமெரிக்காவின் கலிஃபொர்னியா மாகாணத்தின் ரிவர்சைட் கவுண்டி மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று திடீர் காட்டுத்தீ உருவானது. மிக வேகமாக காட்டுத்தீ பரவி வருவதால் அந்த பகுதியில் உள்ள 8 ஆயிறத்திற்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஆரம்பத்தில் 700 ஏக்கர் பரப்பளவில் பரவிய தீ இரண்டே தினங்களில் மளமளவென பரவிய தீ 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவுக்கு காட்டில் பற்றி எரிந்து வருகிறது. தீயை தடுக்க தீயணைப்பு துறை மற்றும் மீட்பு குழுவினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். தீயணைப்பு வாகங்கள் மூலம் தீயை கட்டுக்குள் கொண்டு வர இயலாததால் விமானங்கள் மூலம் தீயை கட்டுப்படுத்தும் பொடியை காட்டில் தெளித்து வருகின்றனர்.

ஆப்பிள் ஃபயர் என பெயரிடப்பட்டுள்ள இந்த காட்டு தீயால் மனிதர்கள் யாரும் இறக்கவில்லை என்றாலும், காட்டு உயிரினங்கள் பல அழிந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments