Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இருளில் மூழ்கிய சீனா.. தினமும் 9 மணி நேரம் மின்தடை பின்னணி என்ன??

இருளில் மூழ்கிய சீனா.. தினமும் 9 மணி நேரம் மின்தடை பின்னணி என்ன??
, வியாழன், 30 செப்டம்பர் 2021 (10:21 IST)
சீனாவில் தினமும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை அமலில் இருப்பதால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். 

 
விண்வெளியில் சாதனைகளை படைக்கும் சீனா மின் பற்றாக்குறையால் திணறி வருகிறது. அங்கு காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை அமலில் இருக்கிறது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். 
 
குடியிருப்புப் பகுதிகளில் பகல் நேரங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டு இரவு நேரங்களில் வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்படுகிறது. சீனாவில் உள்ள ஒட்டு மொத்த மாகாணங்களும் மின்சாரம் இல்லாமல் முடங்கிப் போவதைத் தவிர்க்க, 16 மாகாணங்களில் சுழற்சி முறையில் மின்சாரம் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
 
கடந்த ஆகஸ்ட் மாதம் முதலே இவ்வாறு செய்யப்பட்டு வருகிறது. இதை சரி செய்ய சீனா பல முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை சீனாவில் மின்வெட்டு பிரச்னை நீடிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தாலிபன்கள் வலுவடைய தோஹா ஒப்பந்தம் உதவியது - அமெரிக்க பாதுகாப்புச் செயலர்