Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உலகளாவிய பல்லுயிர் பாதுகாப்பில் சீனாவின் பங்கும் முயற்சியும்!

உலகளாவிய பல்லுயிர் பாதுகாப்பில் சீனாவின் பங்கும் முயற்சியும்!
, வியாழன், 1 அக்டோபர் 2020 (22:28 IST)
இந்த பூமி மனிதர்களுகானது மட்டுமல்ல. மண் புழு முதல் மனிதன் வரை அனைத்தும் இயற்கையின் படைப்புகள்தான். இயற்கையோடு ஒன்றிய, ஒன்றை ஒன்று சார்ந்து வாழும் வாழ்க்கையில்தான் முழுமையான இன்பமும் இருக்கிறது. இடர்களற்ற வாழ்க்கையை வாழ நாம் ஒவ்வொருவரும் இயற்கையை பேணிக்காக்க வேண்டும். காக்கை குருவி எங்கள் ஜாதி என்றான் மகாகவி பாரதி, வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார் இவ்வாறு தன் உயிரைப் போல் பிற உயிர்களிடத்தும் அன்பு பாராட்ட வேண்டும் என்பதை பல அறிஞர்களும் ஞானிகளும் அறிவுறுத்தியுள்ளனர்.
 
இன்றைய சூழலில் இயற்கையையும், பல்லுயிர்களையும் பேணிக்காக்க வேண்டும் என்பதை உலகத் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த மண்ணில் மனிதர்களுக்கு இருக்கும் வாழும் உரிமையைப் போல் பிற உயிர்களுக்கும் வாழும் உரிமை உண்டு. இயற்கை மற்றும் பிற உயிர்களின் அழிவு மனித இனத்துக்கு கேடு விளைவிக்கும் என்பதை உணர்ந்து இயற்கையையும் அதை சார்ந்த பல்லுயிர்களையும்  பேணிக்காக்க வேண்டிய தேவை இப்போது  எழுந்துள்ளது. சுமார் 2.7 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமி மொத்தத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு, பிற உயிர்களுக்கு சிம்ம சொப்பனமாய், பூமியின் ராஜாவாக வாழ்ந்துவந்த டைனோசர்களை பூமியை மோதித் தாக்கிய சிறுகோள்தான் அழித்திருக்கும் என்று பல விண்வெளி விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அதை போன்று ஒரு பேரழிவு மனித இனத்துக்கு வரக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர். எனவே உலக நாடுகள் தற்போது இதில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளன. இதையொட்டி ஐநாவின் பல்லுயிர் உச்சி மாநாட்டில் சுமார் 150 உலகத் தலைவர்கள் வீடியோ கான்ஃபிரன்ஸிங் மூலம் கலந்து கொண்டனர். இயற்கை பேரழிவை தடுப்பதற்காக சிபிடி மாநாட்டின் 2020 இலக்குகள் எதுவும் உலக அளவில் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. எனவே உலகத் தலைவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற பல அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன.
 
நிலம் மற்றும் கடல்களில் உள்ள வளங்களை அதிக அளவில் பயன்படுத்துவதால் ஏற்படும் மாற்றங்கள், காலநிலை மாற்றம், மாசுபாடு மற்றும் ஆக்கிரமிப்பு ஆகியவற்றால் அதிகரித்துவரும் தாக்கங்கள், தற்போதைய உற்பத்தி மற்றும் நுகர்வு முறைகள், மக்கள்தொகை அதிகரிப்பு மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றால் ஏற்படும் இயற்கை பாதிப்பாலும்,  குறைந்து வரும் பல்லுயிர்களாலும் மனிதனின் வாழ்க்கை நலன்  கெடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே வளர்ச்சியில் ஒரு முன்னுதாரண மாற்றம் உட்பட, பொருந்தக்கூடிய லட்சிய மற்றும் சாத்தியமான இலக்குகள் நடைமுறைப்படுத்துவது மிக முக்கியமானது என்ற ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளது. 
 
இரு வாரங்களுக்கு முன் ஐநாவால் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் 2011ஆம் ஆண்டு நாடுகளால் ஒப்புக் கொள்ளப்பட்ட பல்லுயிர் பாதுகாப்பு குறித்த எந்த ஒரு இலக்கும் நிறைவேற்றப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.
 
இந்நிலையில் 2021 ஆம் ஆண்டில் யுன்னானில் நடைபெறவுள்ள பாதுகாப்பு திட்டமிடல் தொடர்பான உயிரியல் பன்முகத்தன்மை மாநாட்டில் 2030 ஆம் ஆண்டில் பூமியில் பாதுகாக்கப்பட வேண்டிய நிலங்கள் மற்றும் பெருங்கடல்களின் சதவீதம் (சிஓபி 15) ஐ.நா. மாநாட்டில் கலந்துரையாடலின் மையமாக இருக்கும். மேலும் "அரை பூமி" க்கான பாதுகாப்புத் திட்டமும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. வளரும் நாடுகள் உலகளாவிய பல்லுயிர் பெருக்கத்தின் பெரும்பகுதியைக் கொண்டுள்ளன, எனவே அவை பல்லுயிர் பாதுகாப்பை மாநில ஆளுகை மற்றும் அனைத்து தொழில்களின் வளர்ச்சியுடன் ஒருங்கிணைப்பதில் சிரமம் உள்ளது, எனினும் சமீபத்திய ஆண்டுகளில், பல்லுயிர் பாதுகாப்புத் துறையில் சீனா பாராட்டுக்குரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது, அரசாங்க முதலீடுகள் மற்றும் குடிமக்களின் விழிப்புணர்வு ஆகிய இரண்டும் சீராக உயர்ந்து வருகின்றன. நில பயன்பாடு, வன பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பு மற்றும் இனங்கள் பாதுகாப்பு ஆகியவற்றிற்கான இடம்சார்ந்த திட்டமிடலில் குறிப்பிடத்தக்க அனுபவங்களை குவிந்துள்ளன. எடுத்துக்காட்டாக, இயற்கை காடுகளின் பாதுகாப்பு மற்றும் "தானியத்திற்கு பச்சை" போன்ற கொள்கைகள் சீனாவின் வனப்பகுதியை கணிசமாக அதிகரித்துள்ளன. அழியும் நிலையில் உள்ள உயிரினங்களான திபெத்திய மான், பெரிய பாண்டா, மற்றும் பனிச்சிறுத்தை போன்ற விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.
 
சமீப காலமாக சிவில் சமூகம் மற்றும் சீனாவில் உள்ள நிறுவனங்களும் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் பாதுகாப்பு நிர்வாகத்தில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகின்றன.
 
இதற்கிடையில், சீனா, ஒரு பெரிய நாடாகவும், சிஓபி 15 இன் புரவலராகவும், உலகளாவிய பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சியை மாற்றுவதில் முக்கிய பங்களிப்பாளராகவும் விளங்குகிறது. அதன் அனுபவம் மற்றும் அறிவார்ந்த நடைமுறைகள் உலகளாவிய பல்லுயிர் பாதுகாப்புக்கு பெரும் பங்களிப்பாக இருக்கக்கூடும், மேலும் அவை உலகளவில் ஊக்குவிக்க தகுதியானவை. ஆனால் போதிய அடிப்படை ஆராய்ச்சி, நம்பகமான தரவு மற்றும் மனித திறன் இல்லாமை, பிராந்திய ஏற்றத்தாழ்வுகள், வளர்ச்சி மற்றும் பல்லுயிர் பெருக்கத்தில் ஏற்றத்தாழ்வுகள் போன்ற சவால்களை சீனா இன்னும் எதிர்கொள்கிறது.
 
-

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கூகுளில் செய்திகளை வெளியிடும் பதிப்பாளர்களுக்கு நிதி: சுந்தர் பிச்சை அறிவிப்பு!