Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவை புரட்டி போட்ட சூறாவளி.. 13 பேர் பலி

Webdunia
சனி, 10 ஆகஸ்ட் 2019 (18:58 IST)
சீனாவின் செஜியாங் மாகாணத்தில் சூறாவளி தாக்கியதில் 13 பேர் பலியாகியுள்ளனர்

சுமார் நள்ளிரவு 1.45 மணியளவில் சீனா நாட்டில் செஜியாங் மாகாணத்தில் லெகிமா என்ற சூறாவளி புயல் தாக்கியது. மணிக்கு 187 கி.மீ வேகத்தில் வீசிய இந்த சூறைகாற்றால், மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன. இதனால் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்த சூறாவளியில் சிக்கி 13 பேர் பலியாகினர். மேலும் 16 பேர் காணாமல் போயுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த சூறாவளியானது செஜியாங், ஜியாங்சு ஆகிய மாகாணங்களில் கடும் சேதத்தை ஏற்படுத்தும் எனவும், ஷாண்டாங் தீபகற்பகத்தின் கடற்கரை பகுதிகளில் நாளை மாலை கரையை கடக்கலாம் எனவும் அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து மீட்பு குழுவைச் சேர்ந்த 1000 வீரர்களும் 150 தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த சூறாவளியால் பலத்த மழையும் பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments