Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் சீனாவை மிரட்டும் கொரோனா! அதிகரிக்கும் எண்ணிக்கை

Webdunia
திங்கள், 13 ஏப்ரல் 2020 (18:09 IST)
சீனாவில் மீண்டும் 100 பேருக்குக் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கொரோனா வைரஸ் காரணமாக மிகப்பெரிய பாதிப்பை அடைந்த சீனாவில் கடந்த சில வாரங்களாக பாதிப்பு எண்ணிக்கை மிகவும் குறைவாகக் காணப்பட்டது. அதனால் அங்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டு இயல்பு வாழ்க்கை மெல்ல மெல்ல திரும்பியது. பள்ளி, கல்லூரிகள், மால்கள், கடைகள் என அனைத்தும் திறக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் திரையரங்குகளும் திறக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

ஆனால் இப்போது அங்கு மீண்டும் 100 பேருக்கு மேல் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த வாரம் பெய்ஜிங்கில் மட்டும் ஒரே நாளில் 99 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் ஒரேநாளில் 108 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலானது சீன மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் மொத்தமாக 82160 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் 3341 பேர் பலியாகி, 77663 பேர் குணமாகி இருந்தனர். கொரோனா வைரஸை சீனா சிறப்பாக எதிர்கொண்டதாக உலக நாடுகள் பாராட்டுகளைத் தெரிவித்திருந்தனர்.
 

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments