Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா வைரஸ் எதிரொலி: வௌவால், பூனைகளை சாப்பிட தடை!

Webdunia
வெள்ளி, 28 பிப்ரவரி 2020 (08:51 IST)
சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் சூழலில் பூனை போன்ற உயிரினங்களை சாப்பிட சீன அரசு தடை விதித்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் இதுவரை 2804 பேரை பலிக் கொண்டுள்ளது. சீனா மட்டுமல்லாமல் ஈரான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன. வைரஸை கட்டுக்குள் கொண்டுவர பலரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த கொரோனா வைரஸ் விலங்குகள் மூலமாகவே மனிதர்களுக்கு பரவுவதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இதனால் சீனா முழுவதும் வௌவால், பாம்பு, நாய், பூனை உள்ளிட்ட விலங்குகளை உண்ண தடை விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் ஆடு, மாடு, வாத்து, கோழி, மீன் உள்ளிட்ட 9 வகையான இறைச்சிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் புதிய வைரஸ் உருவாகாமலும் தடுக்கலாம் என நம்பப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி சிறப்பு மலை சீசன் ரயில் இன்று முதல் தொடக்கம்..!

இனி 5 வயதில் பள்ளியில் குழந்தைகளை சேர்க்க முடியாது: வயது வரம்பை உயர்த்தி உத்தரவு..!

பங்குச்சந்தையில் மீண்டும் ஏற்றம்.. சில நாட்களில் சென்செக்ஸ் 80 ஆயிரத்தை நெருங்குமா?

தவெக பொதுக்குழுவில் அறுசுவை உணவு.. 21 வகையான மெனு விவரங்கள்..!

ரம்ஜான் கொண்டாட்டம்; 500 இந்தியர்களை விடுதலை செய்ய அரபு அமீரகம் முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments