விஜயகுமாருக்கு நோட்டீஸ் அனுப்பிய வருமான வரித்துறை: ரத்து செய்த நீதிமன்றம்!

Webdunia
வெள்ளி, 28 பிப்ரவரி 2020 (08:48 IST)
சந்தன கடத்தல் வீரப்பனை பிடித்த ஐபிஎஸ் அதிகாரிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளதை அடுத்து அந்த நோட்டீசை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த சந்தன கடத்தல் வீரப்பனை, ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் தலைமையிலான படை பிடித்தது.
 
இந்த செயலுக்கு பாராட்டு தெரிவித்து விஜயகுமார் உட்பட அந்த குழுவில் உள்ள அனைவருக்கும் இலவச மனைகள் தமிழக அரசால் வழங்கப்பட்டது. இந்த நிலையில் விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட மனையை விற்பனை செய்ததாக தெரிகிறது. அந்த தொகைக்கு வருமான வரி கட்ட வேண்டும் என்று வருமான வரித்துறை சமீபத்தில் நோட்டீஸ் அனுப்பியது
 
இதுகுறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்று நேற்று விசாரணைக்கு வந்தபோது வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் செங்கோட்டையனுக்கு என்ன பதவி.. விஜய் சந்திப்பில் தீவிர ஆலோசனை..!

ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய்.. வெங்காயத்திற்கு இறுதி சடங்கு செய்த விவசாயிகள்..!

விஜய் வீட்டுக்கு சென்றார் செங்கோட்டையன்.. நாளை தவெகவில் அதிகாரபூர்வ இணைப்பு..!

இம்ரான்கான் சிறையில் கொலை செய்யப்பட்டாரா? சமூகவலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

உரிமையை கொடுங்கள், பிச்சை வேண்டாம்": தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய த.வெ.க.

அடுத்த கட்டுரையில்
Show comments