Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொரோனா வைரஸ் எதிரொலி: வௌவால், பூனைகளை சாப்பிட தடை!

கொரோனா வைரஸ் எதிரொலி: வௌவால், பூனைகளை சாப்பிட தடை!
, வெள்ளி, 28 பிப்ரவரி 2020 (08:51 IST)
சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் சூழலில் பூனை போன்ற உயிரினங்களை சாப்பிட சீன அரசு தடை விதித்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் இதுவரை 2804 பேரை பலிக் கொண்டுள்ளது. சீனா மட்டுமல்லாமல் ஈரான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன. வைரஸை கட்டுக்குள் கொண்டுவர பலரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த கொரோனா வைரஸ் விலங்குகள் மூலமாகவே மனிதர்களுக்கு பரவுவதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இதனால் சீனா முழுவதும் வௌவால், பாம்பு, நாய், பூனை உள்ளிட்ட விலங்குகளை உண்ண தடை விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் ஆடு, மாடு, வாத்து, கோழி, மீன் உள்ளிட்ட 9 வகையான இறைச்சிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் புதிய வைரஸ் உருவாகாமலும் தடுக்கலாம் என நம்பப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜயகுமாருக்கு நோட்டீஸ் அனுப்பிய வருமான வரித்துறை: ரத்து செய்த நீதிமன்றம்!