Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எல்லையில் தங்கச் சுரங்கம்; இது எங்கள் உரிமை; சீனா அதிரடி

எல்லையில் தங்கச் சுரங்கம்; இது எங்கள் உரிமை; சீனா அதிரடி
, திங்கள், 21 மே 2018 (18:07 IST)
அருணாச்சல் பிரதேசம் அருகில் தங்கச் சுரங்கம் தோண்டுவது எங்களது உரிமை என சீனா தெரிவித்துள்ளதால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

 
அருணாச்சல் பிரதேச மாநில எல்லை பகுதியில் தங்கச் சுரங்கம் தொண்டும் பணியை சீனா துவங்கியுள்ளது. இந்த பகுதியில் சுமார் ரூ.4 லட்சம் கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி மற்றும் இதர கனிம தாதுக்கள் நிறைந்துள்ளன.
 
சீன எல்லையை ஒட்டிய திபெத்திய பகுதியிலும் தங்கச் சுரங்கம் தோண்டும் பணியை சீனா துவங்கியுள்ளது. சுரங்கப் பணிகள் நடக்கும் பகுதி முழுக்க சீனாவுக்கு சொந்தமான பகுதி என்று அந்நாட்டு வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் லு காங் தெரிவித்துள்ளார்.
 
இதனால் எல்லை பகுதியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அருணாச்சல் பிரதேசத்தின் ஒரு பகுதி திபெத்திற்கு சொந்தமானது என்று சீனா வெகு நாட்களாக உரிமை கோரி வருவது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சம்பள கணக்கை சேமிப்பு கணக்காக மாற்ற வேண்டுமா?