Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்கானுடன் நட்புறவை வளர்க்க தயார்… சீனா அறிவிப்பு!

Webdunia
திங்கள், 16 ஆகஸ்ட் 2021 (16:54 IST)
ஆப்கானிஸ்தானை முழுமையாக கைப்பற்றியுள்ளது தாலிபான்கள் அமைப்பு. இது உலக அரசியலில் இன்று முக்கிய விவாதப் பொருளாக உள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆக்கிரமிப்பால் அரசு கவிழ்ந்த நிலையில் தலீபான்கள் ஆப்கானிஸ்தானை முழுவதுமாக கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் தலீபான்களுக்கு பயந்து வெளிநாட்டவர்களும், சொந்த நாட்டவர்களுமே நாட்டை விட்டு வெளியேற முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில் காபூல் விமான நிலையத்தை தலீபான் அமைப்பு மூடியுள்ளதுடன் விமான சேவைகளையும் நிறுத்தி வைத்துள்ளது.

இந்நிலையில் அங்கிருந்து புறப்படும் சொற்ப விமானங்களிலும் எப்படியாவது தப்பி பிழைத்து விட எண்ணி பலர் அடைக்கலம் தேடி ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானிலிருந்து புறப்பட்ட அமெரிக்க ராணுவம் விமானம் ஒன்றை சுற்றி பலர் ஓடி வருவதும், அதன் மீது அமர்ந்திருப்பதுமான காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இப்போது சீனா ஆப்கானிஸ்தானோடு நட்புறவோடு இருக்க தயாராக உள்ளதாக சீன வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ‘ஆப்கன் மக்கள் தங்கள் பாதையை தீர்மானிக்கும் உரிமையைப் பெற்றுள்ளனர். அதை சீனா மதிக்கிறது. அவர்களுடன் நட்புறவுக்குத் தயாராக இருக்கிறோம்.’ என அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகள் தூக்கில் தொங்கி தற்கொலை.. அதிர்ச்சியில் அம்மாவும் தூக்கு போட்டு தற்கொலை.. சோக சம்பவம்..!

கருணாநிதி சிலை மீது கருப்பு பெயிண்ட் வீச்சு.. சேலம் அருகே பரபரப்பு..!

நல்லவேளை இந்த அறிவுக்கொழுந்துகள் காமராஜர் காலத்தில் இல்லை!? - எடப்பாடியாரை கலாய்த்த மு.க.ஸ்டாலின்!

காலன் அழைக்கும் வரை கால்கல் ஓயவில்லை! 114 வயதான மாரத்தான் வீரர் சாலை விபத்தில் பலி!

விமானி அறைக்குள் நுழைய முயன்ற 2 பயணிகள்.. டெல்லி - மும்பை விமானத்தில் 7 மணி நேரம் என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments