Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவில் வரலாறு காணாத மழை; பல லட்சம் பேர் வெளியேற்றம்! – மேலும் தொடரும் மழை!

Webdunia
சனி, 24 ஜூலை 2021 (08:33 IST)
சீனாவில் பெய்து வரும் தொடர் மழையால் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் மழை தொடரும் என சீன வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சீனாவின் ஜெங்சோ மற்றும் ஹெனான் உள்ளிட்ட பகுதிகளில் அதீத கனமழை பெய்துள்ளதால் ஊரே வெள்ளக்காடாகியுள்ளது. ஜெங்சோ பகுதியில் ஒரு மணி நேரத்திற்குள்ளாக 200 மில்லி மீட்டர் மழை பெய்ததால் பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பெரும் வெள்ளத்தில் சாலைகளில் நின்றிருந்த கார் உள்ளிட்ட வாகனங்கள் அடித்து செல்லப்படும் வீடியோ, வீடுகள் வெள்ளத்தில் மூழ்கிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த அதீத கனமழை காரணமாக இதுவரை 51 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர சுமார் 12.4 லட்சம் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. சீனாவில் கடந்த ஆயிரம் வருடத்தில் மிகப்பெரும் மழைப்பொழிவாக இது உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சீனாவில் கனமழை மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments