Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வட மாநிலங்களில் கனமழை; சென்னை ரயில்கள் ரத்து! – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Webdunia
சனி, 24 ஜூலை 2021 (08:25 IST)
கடந்த சில நாட்களாக வட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டுள்ள சூழலில் சென்னையிலிருந்து செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கொரோனா காரணமாக நாடு முழுவதும் ரயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது முன்பதிவின்படி கூடிய சிறப்பு ரயில்கள் மட்டும் செயல்பட்டு வருகின்றன. கொரோனா தளர்வுகளை பொறுத்து சமீபமாக சென்னையிலிருந்து வட மாநிலங்களுக்கும் ரயில் சேவை தொடங்கியது.

இந்நிலையில் தற்போது பீகார், அசாம், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள ரயில் நிலையங்களே வெள்ளத்தில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தென் மாநிலங்களான கேரளா, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து மேற்படி மாநிலங்களுக்கு செல்லும் ரயில் சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments