Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 மடங்காக உயர்ந்த பாதிப்பு: ஆபத்தில் 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள்?

Webdunia
திங்கள், 27 டிசம்பர் 2021 (10:23 IST)
5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்படுவது 4 மடங்காக அதிகரித்து காணப்படுகிறது என தெரிய வந்துள்ளது. 

 
தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவியுள்ள ஒமிக்ரான் வேரியண்ட் உலக நாடுகளை மீண்டும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் ஒமிக்ரான் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி அமெரிக்காவில் தற்போது தினசரி கொரோனா பாதிப்பு 1,90,000 ஆக உள்ளது. 
 
இந்நிலையில் அமெரிக்காவில் ஒமிக்ரான் அச்சத்துக்கு இடையே கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 4 மடங்காக அதிகரித்துள்ளது என தெரிய வந்துள்ளது. ஆம், கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி முதல் தற்போது வரை 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் தொற்றால் பாதிக்கப்படுவது 4 மடங்காக அதிகரித்து காணப்படுகிறது.
 
மொத்த பாதிப்பில் 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் எண்ணிக்கை பாதியளவுக்கு இருப்பதால் சுகாதாரத்துறையினர் கலக்கம் அடைந்துள்ளனர். இந்த வயது பிரிவினருக்கு தடுப்பூசி செலுத்த அனுமதி இல்லாத நிலையில் மேலும் பரவலை தடுக்க என்ன செய்ய வேண்டும் என ஆலோசிக்கப்பட்டு வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments