Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தாடி வெச்சா கொரோனா வரும்... புரளியா? உண்மையா?

Advertiesment
தாடி வெச்சா கொரோனா வரும்... புரளியா? உண்மையா?
, வெள்ளி, 28 பிப்ரவரி 2020 (13:41 IST)
தாடி வைத்திருக்கும் ஆண்களுக்கு கொரானா வைரஸ் தாக்குதலுக்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 
 
கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் இதுவரை 2804 பேரை பலிக் கொண்டுள்ளது. சீனா மட்டுமல்லாமல் ஈரான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன. வைரஸை கட்டுக்குள் கொண்டுவர பலரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 
இந்நிலையில், கொரோனவில் இருந்து தப்பிக்க முகமூடி அணியும் போது ஆண்களின் அடர்த்தியான தாடி, மீசை போன்றவை பாதுகாக்கும் முகமுடியையும் மீறி வைரஸ் உடலுக்குள் புக வழிவகை செய்கிறது என  அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்புப் பிரிவுத் துறையினர் ஆய்வு நடத்தி முடிவை வெளியிட்டுள்ளனர். 
 
எனவே, பாதுகாப்பு கறுதி ஆண்கள் க்ளீன் ஷேவ் செய்துகொள்வதை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீச்சல் குளத்துல குளிச்சா கர்ப்பமாகிடுவீங்க! – பெண் அதிகாரியின் பகீர் பேச்சு!