Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிம்பா சிங்கத்தை வளர்க்கும் ஹோட்டல் உரிமையாளர்கள்... சுவாரஸ்யமான பிளாஷ்பேக்!!!

சிம்பா சிங்கத்தை வளர்க்கும் ஹோட்டல் உரிமையாளர்கள்... சுவாரஸ்யமான பிளாஷ்பேக்!!!
, சனி, 30 மார்ச் 2019 (12:43 IST)
பாகிஸ்தானில் ஹோட்டல் நடத்தி வரும் சகோதரர்கள் தங்களது வீட்டில் சிங்கம் ஒன்றை வளர்த்து  வருகின்றனர்.
 
பாகிஸ்தான் மாநிலம் கராச்சியில் ஹோட்டல் நடத்தி வரும் இரு சகோதரர்கள் தங்கள் பண்ணையில் பல்வேறு விலங்குகளை வளர்த்து வருகின்றனர். இது குறித்தான பிளாஷ்பேக் பற்றி கூறிய அவர்கள் ’தி லயன் கிங்’ என்ற கார்ட்டூன் படத்தை பார்த்த எங்களுக்கு சிங்கத்தின் மீது அளவுக்கடந்த மரியாதை ஏற்பட்டது.
 
இதையடுத்து நாங்ககள் இரண்டு வயதுடைய சிம்பா என்ற சிங்கத்தை தற்போது வளர்த்து வருகிறோம். எங்கு சென்றாலும் சிங்கத்தை கூட்டி செல்வோம். குடும்ப உறுப்பினரை போலவே சிங்கம் இவர்களின் வீட்டில் வளர்ந்து வருகிறது. இதனால் பக்கத்துவீட்டார்கள் எந்நேரமும் பயத்தில் இருக்கிறார்கள்.
 
விலங்குகள் பாசமாக இருந்தாலும் கூட சில நேரங்களில் ஆபத்து ஏற்படலாம். ஏற்கனவே செல்லப்பிராணிகள் தாக்கி எஜமானர்கள் உயிரிழந்திருக்கும் நிலையில் இவர்கள் ஏன் இப்படி செய்கிறார்கள் என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொள்ளாச்சி சம்பவம்; பெயரை சொன்ன உதயநிதி – வழக்கை எதிர்கொள்ள தயார் !