Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் சொன்னது நடக்கலைனா உயிரை விடவும் தயார் – பிரதமரின் அதிரடி பேச்சு

Webdunia
வெள்ளி, 6 செப்டம்பர் 2019 (15:50 IST)
ப்ரெக்ஸிட் விவகாரத்தில் தான் சொன்னப்படி வெற்றிபெற முடியாவிட்டால் தன் உயிரை விடவும் தயாராக இருப்பதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.

ஐரோப்பிய யூனியனிலிருந்து இங்கிலாந்து விலகுவதாக 2016ம் ஆண்டு முடிவு செய்தது. அப்போது எடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் சரியான தீர்வு எட்டப்படவில்லை. எதிர்க்கட்சிகள் பலர் ப்ரெக்ஸிட் தீர்மானத்துக்கு எதிராக நின்றதால் பிரச்சினை மேலும் சிக்கலுக்குள்ளானது.
இதனால் அப்போது பிரதமராக பொறுப்பு வகித்து வந்த தெரசா மே பதவி விலகினார். அவரது பதவி விலகலுக்கு பிறகு போரிஸ் ஜான்சன் பதவி ஏற்றுள்ளார். ஆனால் ஜான்சனாலும் பிரெக்ஸிட் தீர்மானத்தில் சரியன முடிவை எட்ட முடியவில்லை. எதிர்கட்சிகள் ப்ரெக்ஸிட் தீர்மானத்துக்கு எதிராக இருப்பதால் ஜான்சனுக்கு சிக்கல் அதிகரித்துள்ளது.


இது குறித்து இங்கிலாந்து மக்களவையில் பேசிய போரிஸ் ஜான்சன் “அக்டோபர் 31க்குள் பிரெக்ஸிட் தீர்மானம் நிறைவேற்றப்படும். இல்லையென்றால் எனது உயிரையும் விட தயாராக உள்ளேன்.” என்று கூறியுள்ளார்.

ஒருவேளை அக்டோபருக்குள் ஜான்சனால் தீர்மானத்தை நிறைவேற்ற முடியாத பட்சத்தில் அவர் பதவி விலக நேரிடலாம் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments