Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூஸ்டர் டோஸ் தேவையில்லாத விஷயம்! – உலக சுகாதார அமைப்பு கண்டனம்!

Webdunia
ஞாயிறு, 14 நவம்பர் 2021 (15:49 IST)
உலகில் பல நாடுகளில் கொரோனா தடுப்பூசி கிடைக்காத நிலையில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது குறித்து உலக சுகாதார அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு உள்ள நிலையில் பல நாடுகளிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏழை நாடுகளுக்கும், அதன் மக்களுக்கும் வளர்ந்த நிலையில் உள்ள நாடுகள் தடுப்பூசி வழங்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கேட்டுக்கொண்டு வருகிறது.

ஆனால் பல நாடுகளில் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டதோடு நில்லாமல் பூஸ்டர் டோஸ் செலுத்துவதும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு ஏழை நாடுகளில் ஒரு நாளைக்கு போடப்படும் முதல் தடுப்பூசியை விட பூஸ்டர் டோஸ்கள் வளர்ந்த நாடுகளில் அதிகமாக செலுத்தப்படுகின்றன. ஏழை நாடுகளில் எவ்வளவோ மக்கள் முதல் டோஸ் தடுப்பூசிக்கே காத்துக்கிடக்கும் நிலையில் பூஸ்டர் டோஸ் அவசியமற்றது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments