தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

Prasanth Karthick
ஞாயிறு, 30 மார்ச் 2025 (12:51 IST)

மியான்மரில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் பலியானவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளது.

 

மியான்மர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் நேற்று முன் தினம் ரிக்டர் அளவில் 7.7 மற்றும் 6.4 அளவுகளில் பதிவான பயங்கர நிலநடுக்கங்களால் பல பகுதிகளிலும் கட்டிடங்கள் சரிந்து விழுந்தன. மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மிகப்பெரிய அணை உடைந்ததோடு, நேபிடாவ், மண்டலே ஆகிய நகரங்கள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன

 

நிலநடுக்கத்தில் இடிந்து விழுந்த கட்டடங்களில் சிக்கி ஏராளமானோர் பலியான நிலையில் மீட்பு பணிகள் வேகவேகமாக நடந்து வருகின்றன. இந்த பேரிடர் சம்பவத்தில் மியான்மருக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் உதவிகளை அறிவித்துள்ளன.

 

இந்நிலையில் நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. சிதிலமடைந்த பகுதிகளில் தோண்ட தோண்ட பிணங்கள் கிடைத்து வரும் நிலையில் பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளது. மியான்மரில் மட்டும் பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், தாய்லாந்து பாதிப்புகளும் சேர்த்தால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் இணக்கமா?!... நாஞ்சில் சம்பத் கேள்விக்கு விஜய் சொன்ன பதில்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு விருந்து.. ராகுல் காந்திக்கு அழைப்பு இல்லை.. சசிதரூருக்கு அழைப்பு..!

டெல்லி - லண்டன் விமான டிக்கெட்டை விட டெல்லி - மும்பை கட்டணம் அதிகம்.. பயணிகள் அதிர்ச்சி..!

செங்கோட்டையனை அடுத்து நாஞ்சில் சம்பத்.. தவெகவுக்கு குவியும் தலைவர்கள்..!

விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம்.. அனுமதி அளித்தது புதுவை அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments