நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

Siva
ஞாயிறு, 30 மார்ச் 2025 (11:37 IST)
தமிழ்நாட்டில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பணிகள் தொடர்ந்து நடைமுறையில் உள்ளன. இந்த நடவடிக்கைகள் நிறைவு பெறும் போது, மாநிலத்தில் மொத்தம் 25 மாநகராட்சிகள், 146 நகராட்சிகள், 491 பேரூராட்சிகள் உருவாக்கப்படும் என அமைச்சர் கே.என். நேரு சட்டசபையில் அறிவித்தார்.
 
இந்நிலையில், தமிழக அரசு சமீபத்தில் 7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக மேம்படுத்தும் உத்தரவை வெளியிட்டுள்ளது. இதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தின் போளூர், செங்கம், கன்னியாகுமரி, சேலம் மாவட்டத்தில் சங்ககிரி, நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி, திருப்பூர் மாவட்டத்தில் அவினாசி, மற்றும் ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை ஆகிய பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
 
இதற்கான திட்டங்கள் ஏற்கெனவே சட்டசபையில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இது அரசிதழில் வெளியிடப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி நேரத்தில் மெட்ரோ ரயில் சேவையில் திடீர் மாற்றம்.. 14 நிமிடத்திற்கு ஒரு ரயில் தான்..!

காலையில் குறைந்த தங்கத்தின் விலையில் மாலையில் நேரத் திடீர் ஏற்றம்: சென்னை நிலவரம்

அரசு ஊழியர்களுக்கு சம்பள பாக்கி.. முதலமைச்சருக்கு சம்பள உயர்வா? பாஜக கண்டனம்..!

போலி உலக சாதனை சான்றிதழ் என அம்பலம்.. தர்ம சங்கடத்தில் முதல்வர் சித்தராமையா..!

இந்தியாவின் ஆதார் கார்டு போலவே இங்கிலாந்து ‘பிரிட் கார்டு’.. பிரதமர் ஸ்டார்மர் திட்டம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments